சுங்கத்துறை

இஸ்லாமாபாத்: மேற்குப் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை அடையாளம் தெரியாத பேர்வழிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
ஹாங்காங்: இயந்திரப் பாகங்களாக வடிவமைக்கப்பட்ட 84 மில்லியன் ஹாங்காங் டாலர் (S$14.6 மி.) மதிப்புடைய தங்கம், ஹாங்காங் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
பெட்டாலிங் ஜெயா: கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் வழியாக இடம்பெற்ற கடத்தல் நடவடிக்கைகள் மூலம் மலேசிய அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு பில்லியன் ரிங்கிட் (S$571 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 29) தெரிவித்தார்.
சிங்கப்பூர் சுங்கத்துறையின் பெயரில் பொதுமக்களுக்கு மோசடி மின்னஞ்சல்கள் வரத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து விழிப்பாக இருக்கும்படி சுங்கத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
4,420 சிகரெட் பெட்டிகளுக்கான சுங்க வரி மற்றும் பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) செலுத்தாத குற்றத்துக்காக இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் ஜனவரி 31ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.